சிற்றின்பமும் …பேரின்பமும்

சிற்றின்பமும் …பேரின்பமும்

அருணாச்சலம்

 

*படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.*

*படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.*

*படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.*

*படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.*

*படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.*

*படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.*

*என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.*

*இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.*

*நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.*

*நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.*

*அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.*

*அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.*

*செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.*

*செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.*

*செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.*

*செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.*

*புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.*

*அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.*

*இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.*

*வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.*

*நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.*

*நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.*

*உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.*

*உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.*

*இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.*

*துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.*

*எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.*

*எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.*

*பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.*

*மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.*

*பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.*

*பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.*

*சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.*

*எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.*

*பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.*

*தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.*

*அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.*

*அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.*

*அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.*

*அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.*

*அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.*

*அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.*

*பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.*

*பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.*

*முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.*

*முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.*

*இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.*

*கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.*

*உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.*

*உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.*

*புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.*

*புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.*

*மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.*

*மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.*

*மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.*

*மரணத்தையும் வெல்வது பேரின்பம்.*

*மனமாய் இருந்தால் சிற்றின்பம்.*

*மனதைக் கடந்தால் பேரின்பம்.*

*வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.*

*எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.*

*பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.*

*மொத்தமாய் கண்டால் பேரின்பம்.*

*அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.*

*அகங்காரம் துறந்தால் பேரின்பம்.*

*தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.*

*அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.*

*ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.*

*ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.*

*துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.*

*துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.*

*ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.*

*இறைவனால் தரப்படுவது பேரின்பம்.*

*உலகைப் பற்றினால் சிற்றின்பம்.*

*இறைவனைப் பற்றினால் பேரின்பம்.*

*பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.*

*தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.*

*இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.*

*இன்பமான இன்பமே பேரின்பம்.*

*அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.*

*ஞானம் விரும்புவது பேரின்பம்*

*பெற்று மகிழ்வது சிற்றின்பம்.*

*கொடுத்து மகிழ்வது பேரின்பம்.*

*சக்தியை இழப்பது சிற்றின்பம்.*

*சக்தியாய் மாறுவது பேரின்பம்.*

*பற்றுக் கொள்வது சிற்றின்பம்.*

*பற்றற்று இருப்பது பேரின்பம்.*

*மாறுவது, தாவுவது சிற்றின்பம்.*

*மாறாதது நிலைத்தது பேரின்பம்.*

*நிலையற்றது சிற்றின்பம்.*

*நிரந்தரமானது பேரின்பம்.*